Posts
Showing posts from 2010
கட்டாய திருமணத்தை தடுத்து சாதித்தார் 16 வயது சிறுமி
- Get link
- X
- Other Apps
26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேர் குற்றவாளி என அறிவிப்பு தி.மு.க., வலையில் சிக்கும் அடுத்தடுத்த அ.தி.மு.க., புள்ளிகள் யார்? மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் ஜெ.,:துணை முதல்வர் பேச்சு இலங்கையில் தமிழர் மறுகுடியமர்த்தம் : முதல்வர் அவசர கடிதம் கர்ப்பிணிகள் மீன் அதிகம் சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது கிணற்றுத் தவளையா தமிழக மாணவர்கள்?அகில இந்திய தேர்வுகளில் சொதப்புவது ஏன்? ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் திருமலையில் அணிய தடை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சி : மின்வெட்டை சமாளிக்கும் பணி துவக்கம் ஹூண்டாய் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் ஆல்பம் திருச்சி : குடும்ப பொருளாதார சூழல், பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக பால்ய திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த திருச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, படிப்பு மேல் ஏற்பட்ட காதலால், "ஹெல்ப் லைன்-1098' எண்ணுக்கு போன் செய்து, கட்டாயத் திருமணத்திலிருந்து தன்னை தற் காத்துக் கொண்டு மற்ற சிறுமிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். திருச்சி, உறையூர், காவ...
அவள் இல்லாமல்
- Get link
- X
- Other Apps
போன வழியும் தெரியல வந்த வழியும் புரியல; கண் மூடி திறக்கும் முன் எல்லாமே நடந்துருச்சு; அவ கிட்ட கூட சொல்லல, கை பிடிச்ச நாளாய் என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய் என் கூடவே தான் அவ இருப்பா; பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ புரியலையே! நான் சிரிச்சா அவ சிரிப்பா, நான் அழுதா அவ தொடப்பா, இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம் சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு நான் சாப்புடாம; வெளிய நான் போனாலும் மனசெல்லாம் வழியில வெச்சு காத்து கெடப்பா; நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல; பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட எங்க காதல் கொறையவே இல்ல; மருமகளுங்க வந்தும் கூட அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும் கெழவி ஆகியும் கூட அவ இன்னும் எத்தனை அழகாதான் இருக்குறா; என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய விட்டுட்டு வந்துட்டேனே; அவ இல்லாம இந்த சொர்க்கமும் எனக்கு நரகம் தான்!
நிறைவேறாத காதல்
- Get link
- X
- Other Apps
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் - அணைப்பதற்கு ..... நெருப்பாலும் முடியாதம்மா... நினைவுகளை அளிப்பதற்கு ..... உனக்காக காத்திருப்பின் உயிரோடு பார்த்திருப்பான் அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாயி அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தே கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவது போல் என் வாழ்வில் வந்தே போனே ஏமாற்றம் தாங்கலையே பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே ..