போன வழியும் தெரியல வந்த வழியும் புரியல; கண் மூடி திறக்கும் முன் எல்லாமே நடந்துருச்சு; அவ கிட்ட கூட சொல்லல, கை பிடிச்ச நாளாய் என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய் என் கூடவே தான் அவ இருப்பா; பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ புரியலையே! நான் சிரிச்சா அவ சிரிப்பா, நான் அழுதா அவ தொடப்பா, இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம் சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு நான் சாப்புடாம; வெளிய நான் போனாலும் மனசெல்லாம் வழியில வெச்சு காத்து கெடப்பா; நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல; பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட எங்க காதல் கொறையவே இல்ல; மருமகளுங்க வந்தும் கூட அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும் கெழவி ஆகியும் கூட அவ இன்னும் எத்தனை அழகாதான் இருக்குறா; என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய விட்டுட்டு வந்துட்டேனே; அவ இல்லாம இந்த சொர்க்கமும் எனக்கு நரகம் தான்!